செய்திகள்

நாகை அருகே அரசு பஸ் மீது தனியார் பஸ் மோதி 20 பேர் படுகாயம்

Published On 2019-06-26 12:28 GMT   |   Update On 2019-06-26 12:28 GMT
நாகை அருகே வேளாங்கண்ணி செல்வதற்காக அரசு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த போது, தனியார் பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் பழைய பஸ் நிலையத்தில் வேளாங்கண்ணி செல்வதற்காக அரசு பஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த போது, நாகப்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி நோக்கி சென்ற தனியார் பஸ் நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. 

இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை டவுன் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News