செய்திகள்
கீழ்வேளூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கீழ்வேளூர் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கோகூர் பகுதியை சேர்ந்தவர் தம்பா (வயது 60) விவசாயி. இவர் நீண்ட நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த அவர் வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கீழ்வேளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.