செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஈரோட்டில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2019-06-15 10:00 GMT   |   Update On 2019-06-15 10:00 GMT
நீட் தேர்வை கண்டித்து ஈரோடு வீரப்பசத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு:

நீட் தேர்வை கண்டித்து ஈரோடு வீரப்பசத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம் தொடங்கி வைத்தார்.

மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, பாட்ஷா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர் முருகன், தி.மு.க கோட்டை பகுதி செயலாளர் ராமசந்திரன், பெரியசேமூர் செல்வராஜ், தமிழ்புலிகள் கட்சியின் சிந்தனை செயலாளர் சித்திக், சலீம்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க, ம.தி.மு.க , காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ் புலிகள், யூனியன் முஸ்லிம் லீக் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.
Tags:    

Similar News