செய்திகள்

அவனியாபுரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2019-05-27 11:17 GMT   |   Update On 2019-05-27 11:17 GMT
அவனியாபுரம் பகுதியில் நாளை (செவ்வாய்க் கிழமை) மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

அவனியாபுரம்:

அவனியாபுரம் பகுதியில் நாளை (செவ்வாய்க் கிழமை) மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து மதுரை மேற்கு மின் வினியோக செயற்பொறியாளர் ராஜா காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அவனியாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே அந்த நேரத்தில் எம்.எம்.சி. காலனி, வி.ஏ.எஸ்.நகர், பி.சி.எம். சொக்குபிள்ளை நகர், ஜெயபாரத் சிட்டி, பை-பாஸ் ரோடு முழுவதும், அவனியாபுரம் மேல்நிலைப் பள்ளி, அவனியாபுரம் ஸ்டேட் பேங்க், மல்லிகை வீடுகள், அவனியாபுரம் பஸ் நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு,

பிரசன்னா காலனி முழுவதும், பாப்பாகுடி, வள்ளலானந்தாபுரம், ஜே.ஜே.நகர், வைக்கம் பெரியார் நகர் ரோடு, ரிங் ரோடு, பெரியசாமி நகர் முழுவதும், திருப்பதி நகர் முழுவதும், அண்ணாநகர், அக்ரகாரம், புரசரடி, ஜே.பி.நகர், வெள்ளக்கல், திருப்பரங்குன்றம் ரோடு, பர்மா காலனி, கணேசபுரம், மண்டேலாநகர், விமான நிலைய குடியிருப்பு பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

மேற்கண்ட விவரம் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News