செய்திகள்

கும்பகோணம் அருகே தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

Published On 2019-05-20 09:58 GMT   |   Update On 2019-05-20 09:58 GMT
கும்பகோணம் அருகே தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே சாக்கோட்டை கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது47). கொத்தனார். இவரது மகன் பூவரசன்(22). ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். குடும்ப தகராறு காரணமாக பூவரசன் தனது அம்மாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதை தட்டிக்கேட்ட ரவியை அரிவாளால் பூவரசன் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த ரவியை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூவரசனை கைது செய்தனர்.

Tags:    

Similar News