செய்திகள்

திருச்சி மாவட்டத்தில் 1-ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்- கலெக்டர் அறிவிப்பு

Published On 2019-04-29 16:38 GMT   |   Update On 2019-04-29 16:38 GMT
மே தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 1-ந்தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.
திருச்சி:

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வருகிற 1-ந்தேதி (புதன் கிழமை) மே தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக்கடைகள் மூடப்பட்டிருக்கும். அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள், எப்.எல்.1,  எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ., எப்.எல்.3ஏஏ., மற்றும் எப்.எல்.11 முதலான ஓட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும்.

எனவே மே தினத்தன்று அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும். 

இவ்வாறு கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News