செய்திகள்
வீரவநல்லூர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
வீரவநல்லூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற 2 வாலிபர்களை கைது செய்தனர்.
நெல்லை:
வீரவநல்லூர் அருகே உள்ள அரிகேசவநல்லூர் பகுதியில் வீரவநல்லூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 2 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும், அவசரமாக புறப்பட்டு சென்றனர். போலீசார் சந்தேகம் அடைந்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் 1.5 கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம் ஆகும். அவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து கஞ்சா வைத்து இருந்த அரிகேசவநல்லூரை சேர்ந்த தர்மேந்திரா (30), வெள்ளாளங்குழியைச் சேர்ந்த மதியழகன் (23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.