தக்கலை அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
தக்கலை:
தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 35).
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரி திக்கணங்கோட்டிற்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்றார். அங்கு பொருட்களை வாங்கி விட்டு தனது உறவினர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
புதூர் பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக நிலைத் தடுமாறிய ராஜேஸ்வரி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.
உடனே அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவந்தனர்.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை ராஜேஸ்வரி இறந்துவிட்டார். இதுபற்றி ராஜேஸ்வரியின் தாயார் வசந்தகுமாரி தக்கலை போலீசில் புகார் செய்தார். தக்கலை போலீசார் இந்த விபத்துபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews