செய்திகள்

திருச்சியில் கஞ்சா விற்ற பெண் கைது

Published On 2019-03-20 13:57 GMT   |   Update On 2019-03-20 13:57 GMT
அரியமங்கலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:

திருச்சி அரியமங்கலம் மலையப்பநகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் மதியழகனுக்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து சென்றார். அப்போது மலையப்பநகர் தண்ணீர் தொட்டி அருகில் பெண் ஒருவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில், திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த செல்வராஜ் மனைவி உமா மகேஸ்வரி (35) என்பது தெரிய வந்தது. 

அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா, ரூ.1,060 பணத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News