செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - பெண் வக்கீல்கள் கோரிக்கை நிராகரிப்பு

Published On 2019-03-14 07:50 GMT   |   Update On 2019-03-14 07:50 GMT
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணையை நீதிபதி கண்காணிக்க வேண்டும் என்ற பெண் வக்கீல்களின் கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்தது. #PollachiAbuseCase #PollachiCase #MadrasHC
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தஹில் ரமானி ரோகிணி நீதிபதி துரைசாமி ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போது பெண் வக்கீல்கள் சிலர் ஆஜராகி, பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை ஐகோர்ட்டு மேற்பார்வையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு தலைமை நீதிபதி ஏற்கனவே இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது எனவே அந்த வழக்கு விசாரணையை இந்த ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை என்று பெண் வக்கீல்களின் கோரிக்கைகளை நிராகரித்தனர். #PollachiAbuseCase #PollachiCase #MadrasHC

Tags:    

Similar News