செய்திகள்

குமரி மாவட்டத்தில் பணியாற்றிய 14 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

Published On 2019-02-16 10:31 GMT   |   Update On 2019-02-16 10:31 GMT
பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பு இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தை சேர்ந்த 14 இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.
நாகர்கோவில்:

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அரசு அதிகாரிகளை கண்டறிந்து அவர்களை வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்ய அரசுக்கு தேர்தல் கமி‌ஷன் அறிவுறுத்தியது.

இதையடுத்து அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.

முதற்கட்டமாக போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் பணிபுரிந்த 64 சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்டை மாவட்டங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அடுத்த கட்டமாக இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தை சேர்ந்த 14 இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.

கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பரத் ஸ்ரீனிவாஸ், சேம் வேதமாணிக்கம் ஆகிய 5 பேர் மதுரை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

இதுபோல குலசேகரம் இன்ஸ்பெக்டர் தங்கம், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் செல்வம், குளச்சல் இன்ஸ்பெக்டர் முத்துராமன், இரணியல் இன்ஸ்பெக்டர் சுதேசன், பூதப்பாண்டி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி,

நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி, நித்திரவிளை இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் ஆகியோர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் பிறப்பித்து உள்ளார்.
Tags:    

Similar News