செய்திகள்

கோவில் நிலத்தை மீட்பதில் இந்துசமய அறநிலையத் துறை செயல்பாடுகள் திருப்தியாக இல்லை - ஐகோர்ட் அதிருப்தி

Published On 2019-02-12 10:48 GMT   |   Update On 2019-02-12 10:48 GMT
ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்பதில் இந்துசமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என ஐகோர்ட் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. #HighCourt
மதுரை:

கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்பதில் இந்துசமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என ஐகோர்ட் மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்பதில் இந்துசமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை.

கோவில்களுக்கு இடங்களை தானமாக வழங்கியோர் பட்டியல் மற்றும் சொத்து விவரங்கள் மாவட்ட கருவூலத்தில் பாதுகாப்பாக உள்ளதா? என அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உறுதிப்படுத்த வேண்டும்.

இதுகுறித்து வருவாய்த்துறை செயலர், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். #HighCourt
Tags:    

Similar News