செய்திகள்

வாலாஜா தொழிலாளி உயிரிழப்பு - மணல் லாரி டிரைவர் கைது

Published On 2019-01-19 10:29 GMT   |   Update On 2019-01-19 10:29 GMT
வாலாஜா எடக்குப்பம் கிராமம் அருகே மணல் லாரி காம்பவுண்ட் சுவர் மீது மோதியதில் இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர்.
வாலாஜா:

வாலாஜா எடக்குப்பம் கிராமம் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 37). தொழிலாளி. இவரது மனைவி யாமுனாநதி. இவர்களுக்கு 2 மகளும் 1 மகனும் உள்ளனர்.

சம்பவத்தன்று இரவு ராதாகிருஷ்ணன் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு அவரின் வீட்டு வழியாக மணல் ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

ராதாகிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருந்த காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ராதாகிருஷ்ணன் இறந்தார்.

இதையடுத்து யமுனாநதி தனக்கு நிவாரண நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தனது பிள்ளைகளுடன் வந்து மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் வாலாஜா அடுத்த தகரகுப்பம் திருமலை நகர் பகுதியை சேர்ந்த சின்னதுரை (வயது 35). என்பவரை நேற்று மாலை வாலாஜா போலீசார் கைது செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் சீனு என்பரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News