செய்திகள்

கோபி அருகே வீட்டு முன் விளையாடிய சிறுமி தவறி விழுந்து பலி

Published On 2019-01-11 10:02 GMT   |   Update On 2019-01-11 10:02 GMT
கோபி அருகே வீட்டு முன் விளையாடிய சிறுமி தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபி:

கோபி மொடச்சூர் ரோட்டை சேர்ந்தவர் தர்மதுரை. சோன்பப்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மனைவி பெயர் கமலேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மகள் பெயர் சன்மதினா (வயது7).மகன் பெயர் கிருஷ்ணன்(8). இந்த நிலையில் சன்மதினா. கோபி அருகே உள்ள குழவி கரட்டில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றாள்.

நேற்று இரவு சிறுமி சன்மதினா பாட்டி வீட்டு முன் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி கீழே விழுந்தாள். இதில் படுகாயத்துடன் துடித்த சிறுமியை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சன்மதினா பரிதாபமாக இறந்தாள். சிறுமியின் உடல் கோபி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவளது உடலை பார்த்து பெற்றோர் உறவினர்கள் கதறி அழுத காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது.

இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News