ஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மாரம்பட்டி வனப்பகுதி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் தனிப்படை போலீசார் ஒரு வழக்கிற்காக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நாட்டு துப்பாக்கி வைத்து கொண்டு 2 வாலிபர்கள் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர்.
போலீசாரை கண்டதும் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சந்திராவரம் வேடியப்பன் நகரை சேர்ந்தவர் அய்யகண்ணு என்கிற சின்னசாமி (வயது 36), அவரது உறவினர் சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் ராஜகண்ணு (43) ஆகிய 2 பேரும் நாட்டு துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாட வந்திருப்பது தெரியவந்தது.
உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் நாட்டு துப்பாக்கி ஒன்றையும பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 பேரையும் ஊத்தங்கரை கிளை சிறையில் போலீசார் அடைத்தனர்.