செய்திகள்

பெரியகுளம் அருகே தந்தை-மகளை தாக்கிய கும்பல் கைது

Published On 2018-12-21 17:05 GMT   |   Update On 2018-12-21 17:05 GMT
பெரியகுளம் அருகே தந்தை, மகளை தாக்கிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தேனி:

பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் ராஜூ மகள் இந்திராணி (வயது 58). ராஜூவுக்கு அதே பகுதியில் வயல் மற்றும் வீட்டடி நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதியை இந்திராணி தனது சகோதரர் பரமசிவத்துக்கு கொடுக்க விரும்பினார்.

ஆனால் பரமசிவம் குடும்பத்தினர் முழுவதும் தங்களுக்கு வேண்டும் என தகராறு செய்தனர். சம்பவத்தன்று ராஜூ மற்றும் இந்திராணியை அந்த கும்பல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது.

இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தந்தை மகளை தாக்கிய பரமசிவம் மகன் சோமசுந்தரம், பழனியம்மாள், ஜெயமணி, இந்திரன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் பெரியகுளம் காந்தி நகரைச் சேர்ந்தவர் முருகபாண்டி (24). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று வடுகபட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பையா என்பவர் இவரது ஆட்டோவில் சென்றுள்ளார்.

ஆனால் பணம் தராமல் முருகபாண்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.

Tags:    

Similar News