செய்திகள்

கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர் - மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்

Published On 2018-12-15 16:12 GMT   |   Update On 2018-12-15 16:12 GMT
கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், நாம் தனித்தே நிற்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #KamalHaasan #NalaiNamadhe
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

கூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர். மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது. உந்தப்பட்டால் தனித்து நிற்போம். நான் அரசியலுக்கு வந்த காரணத்தை கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் உணர்வர். அது குறுகிய ஆதாயங்களுக்காக அல்ல, நாளை நமதே என பதிவிட்டுள்ளார். #KamalHaasan #NalaiNamadhe
Tags:    

Similar News