செய்திகள்

முத்திரையர்பாளையத்தில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது - 1½ கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2018-12-15 09:21 GMT   |   Update On 2018-12-15 09:21 GMT
முத்திரையர் பாளையத்தில் கஞ்சா வியாபாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி:

புதுவை முத்திரையர் பாளையம் கல்கி கோவில் அருகே புளியந்தோப்பில் 2 பேர் கஞ்சா பொட்டலங்களை விற்க தயார் செய்வதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமணி, சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது போலீசாரை பார்த்ததும் 2 பேர் தப்பி ஓட முயன்றனர். ஆனால், அவர்களை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அவர்களிடம் 10 கிராம் பொட்டலங்களாக மொத்தம் 1½ கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்களில் ஒருவன் காந்தி திருநல்லூரை சேர்ந்த அய்யப்பன் (வயது 26), மற்றொருவன் திருவண்ணாமலை சமுத்திர காலனியை சேர்ந்த தர்மன் (21) என்பதும், மொத்த கஞ்சா வியாபாரியான தர்மனிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து அய்யப்பன் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் புதுவையில் தங்கி விற்பனை செய்ய தர்மன் விரும்பியதால் தர்மனை அய்யப்பன் புதுவை அழைத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News