செய்திகள்

தொண்டாமுத்தூரில் எச்ஐவி பாதித்த சிறுமியை தாக்கிய தாய்மாமன் கைது

Published On 2018-12-15 05:03 GMT   |   Update On 2018-12-15 05:03 GMT
தொண்டாமுத்தூர் அருகே எச்.ஐ.வி. பாதித்த சிறுமியை தாக்கிய தாய்மாமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

தொண்டாமுத்தூர் அருகே வெள்ளருகம்பாளையத்தை சேர்ந்தவர் ஆரன் என்ற ஆறுசாமி (வயது 30).

இவரது சகோதரி ஒருவர் கடந்த 10 வருடத்துக்கு முன்பு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். சகோதரி மகளான 15 வயது சிறுமிக்கும் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று ஆறுசாமி வீட்டுக்கு அந்த சிறுமி சென்று தூங்கினார். இதைப் பார்த்ததும் ஆறுசாமி ஆவேசம் அடைந்தார். நீ இங்கு எதற்காக வந்தாய்? என கூறி ஆறுசாமி சிறுமியை விரட்டியதோடு, மரக்கட்டையால் தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த சிறுமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். சிறுமியை தாக்கிய ஆறுசாமி மீது கொலை முயற்சி, தகாத வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் விசாரணை நடத்தி ஆறுசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Tags:    

Similar News