செய்திகள்

கமி‌ஷனர் அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகள் புகார்

Published On 2018-12-10 10:21 GMT   |   Update On 2018-12-10 10:21 GMT
சாலையோர கடைகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் கடைகளை உடைத்துள்ளது குறித்து வியாபாரிகள் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை:

சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில், மாற்று திறனாளிகளுடன் காங்கிரஸ் பிரமுகர் எஸ்.எம். குமார் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

சோழிங்கநல்லூர் முதல் மேடவாக்கம் செல்லும் மெயின் ரோட்டில் நடைபாதையில், மாற்று திறனாளிகள், விதவைகள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். கடைகள் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், வியாபாரிகளுக்கு மாநகராட்சி அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செம்மஞ்சேரி போலீசாரின் உதவியுடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், தனிநபர் ஒருவரும் சேர்ந்து கடைகளை புல்டோசர் மூலம் அடித்து உடைத்துள்ளனர்.

இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மாற்றுதிறனாளிகள் கடை வைப்பதற்கும் அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News