செய்திகள்

சோழிங்கநல்லூரில் கழிவு நீர் லாரிகள் 5-வது நாளாக வேலை நிறுத்தம்

Published On 2018-12-07 09:45 GMT   |   Update On 2018-12-07 09:45 GMT
சோழிங்கநல்லூர் பகுதியில் கழிவு நீர் அகற்றும் லாரிகள் இன்று 5-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
சோழிங்கநல்லூர்:

சோழிங்கநல்லூர் பகுதியில் கழிவு நீர் அகற்றும் லாரிகள் இன்று 5-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. கட்டண உயர்வை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வற்புறுத்தி லாரி உரிமையாளர்கள் இந்த போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

இதனால், சோழிங்கநல்லூரை சுற்றியுள்ள பகுதியில் கழிவு நீர் தேங்கி கிடப்பதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், போராட்டம் நடத்தும் கழிவு நீர் லாரி அதிபர் சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.
Tags:    

Similar News