செய்திகள்

கோவையில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டு-வாலிபர்கள் 2 பேர் கைது

Published On 2018-11-29 21:59 IST   |   Update On 2018-11-29 21:59:00 IST
கோவையில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பெரிய நாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் நடந்து வந்தது.

இது குறித்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடும் மர்ம நபர்களை தேடி வந்தனர்.

நேற்று தொடர் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் காரமடை அருகே உள்ள தோழம்பாளையத்தை சேர்ந்த சண்முகம் (வயது 33), வடிவேல் (33) என்பது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து பெரிய நாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள், 2 மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News