செய்திகள்

நோனாங்குப்பத்தில் பெண்ணை மானபங்கம் செய்த மளிகை கடைக்காரர் கைது

Published On 2018-11-05 09:44 GMT   |   Update On 2018-11-05 09:44 GMT
நோனாங்குப்பத்தில் பெண்ணை மானபங்கம் செய்த மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி:

அரியாங்குப்பத்தை அடுத்த நோனாங்குப்பத்தில் மளிகைகடை நடத்தி வருபவர் கலியமூர்த்தி (வயது51). இவரது கடைக்கு அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் மளிகை பொருட்கள் வாங்க வருவது வழக்கம்.

அதுபோல் சம்பவத்தன்று அந்த பெண் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க வந்தார். அப்போது கலியமூர்த்தி அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் முறையிட்டார்.

இதையடுத்து அவரது பெற்றோர் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்தனர்.

Tags:    

Similar News