செய்திகள்
புதுவையில் தனியார் கம்பெனி ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
புதுவையில் தனியார் கம்பெனி ஊழியரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை பிச்சைவீரன்பேட் புதுநகர் வடக்கு வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது 42). தனியார் கம்பெனி ஊழியர்.
இவர் கடந்த 28-ந் தேதி இரவு மேட்டுப்பாளையத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது 2 பேர் தசரதனிடம் வந்து இந்த முகவரி எங்கு இருக்கிறது? என்று கேட்டனர். அதற்கு தசரதன் எனக்கு தெரியாது என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தசரதனை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து தசரதன் மேட்டுப்பாளைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் தசரதனை தாக்கியது சின்னயன் பேட் பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (வயது 21), சாரம் பகுதியை சேர்ந்த கிஷோர் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
புதுவை பிச்சைவீரன்பேட் புதுநகர் வடக்கு வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது 42). தனியார் கம்பெனி ஊழியர்.
இவர் கடந்த 28-ந் தேதி இரவு மேட்டுப்பாளையத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.
அப்போது 2 பேர் தசரதனிடம் வந்து இந்த முகவரி எங்கு இருக்கிறது? என்று கேட்டனர். அதற்கு தசரதன் எனக்கு தெரியாது என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தசரதனை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து தசரதன் மேட்டுப்பாளைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் தசரதனை தாக்கியது சின்னயன் பேட் பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (வயது 21), சாரம் பகுதியை சேர்ந்த கிஷோர் (21) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.