செய்திகள்
சிவகிரியில் சிலிண்டர் வெடித்து பெண் படுகாயம்
நெல்லை மாவட்டம் சிவகிரியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் பெண் படுகாயமடைந்தார். ந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சிவகிரியில் வெள்ளையம்மாள் என்பவரது வீடு உள்ளது. இன்று காலை அவர் வீட்டில் இருந்தபோது பக்கத்து வீட்டில் திடீரென்று கியாஸ் கசிந்து தீ பிடித்தது. அப்போது கியாஸ் சிலிண்டர் திடீரென்று வெடித்தது. இதில் வெள்ளையம்மாள் வீடும் இடிந்து சேதமானது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு சிவகிரி தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வமுருகேசன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சிவகிரியில் வெள்ளையம்மாள் என்பவரது வீடு உள்ளது. இன்று காலை அவர் வீட்டில் இருந்தபோது பக்கத்து வீட்டில் திடீரென்று கியாஸ் கசிந்து தீ பிடித்தது. அப்போது கியாஸ் சிலிண்டர் திடீரென்று வெடித்தது. இதில் வெள்ளையம்மாள் வீடும் இடிந்து சேதமானது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.
அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு சிவகிரி தீயணைப்பு நிலைய அதிகாரி செல்வமுருகேசன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.