செய்திகள்

திண்டுக்கல் அருகே டிரான்ஸ்பார்மர் தீ பிடித்ததால் பரபரப்பு

Published On 2018-10-11 12:50 GMT   |   Update On 2018-10-11 12:50 GMT
திண்டுக்கல் அருகே டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வடமதுரை:

திண்டுக்கல் அருகே தாமரைப்பாடியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மரில் ஆயில் லீக்கேஜ் ஏற்பட்டு வந்துள்ளது.

இதனை அதிகாரிகள் கவனிக்காததால் இன்று காலை திடீரென டிரான்ஸ்பார்மரில் இருந்து புகை கிளம்பியது.

சிறிது நேரத்தில் தீப்பற்றி மளமளவென பரவியது. அதிகாலை நேரம் நடைபயிற்சி சென்றவர்கள் டிரான்ஸ்பார்மரில் தீப்பற்றி எரிவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடி தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இது குறித்து திண்டுக்கல் தீயணைப்புத்துறையினருக்கும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து போராடி தீயை அணைத்தனர். அதன்பின்பு டிரான்ஸ்பார்மரை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்து மீண்டும் மின்சப்ளை கொடுக்கப்பட்டது. காலை நேரத்தில் டிரான்ஸ்பார்மரில் பற்றிய தீயால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News