செய்திகள்

வாசுதேவநல்லூரில் அனுமதியின்றி தண்ணீர் பிடிக்க பயன்படுத்திய 38 மின்மோட்டார்கள் பறிமுதல்

Published On 2018-10-05 23:02 IST   |   Update On 2018-10-05 23:02:00 IST
வாசுதேவநல்லூர் டவுண் பஞ்சாயத்து பகுதிகளில் அனுமதியின்றி தண்ணீர் பிடிக்க பயன்படுத்திய 38 மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிவகிரி:

வாசுதேவநல்லூர் டவுண் பஞ்சாயத்து பகுதிகளில் வீட்டு தண்ணீர் இணைப்புகளில் மின்மோட்டார் மூலம் குடிநீரினை உறிஞ்சுவதாகவும் இதனால் மின்மோட்டார் இணைப்பு இல்லாதவர்களுக்கு தண்ணீர் சப்ளை சரியாக கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் மாநில, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் மனு அனுப்பினர்.

இதையடுத்து பேரூராட்சிளின் இயக்குநர் பழனிச்சாமி, கலெக்டர் ஷில்பா, பேரூராட்சிகளின் இணை இயக்குநர் மாஹின் அபூபக்கர் ஆகியோர்களின் உத்தரவின் பேரில் வாசுதேவநல்லூர் பகுதிகளில் மின்மோட்டார் மூலம் குடிநீரினை உறிஞ்சும் குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து மின் மோட்டாரை பறிமுதல் செய்ய ஆய்வுப்பணி நடந்தது.

பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள் லெனின், கண்மணி, வெங்கடகோபு, கலாராணி, முரளி, ஆதம், அப்துல்கலாம் ஆசாத் மற்றும் தலா 5 பேர்கள் வீதம் குடிநீர் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் உள்ள 2,3,11,14,15 ஆகிய வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதில் 38 வீடுகளில் தண்ணீரை உறிஞ்சும் மோட்டார்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் வருங்காலங்களில் மின்மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்ணீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்படும் என எச்சரித்தனர். #tamilnews
Tags:    

Similar News