செய்திகள்

பள்ளி மாணவனுடன் காதல் - சென்னை ஓட்டலில் தங்கியிருந்த கேரள ஆசிரியை கைது

Published On 2018-09-29 04:40 GMT   |   Update On 2018-09-29 04:40 GMT
பள்ளி மாணவனை காதலித்த கேரள ஆசிரியை, வீட்டிற்கு தெரியாமல் அந்த மாணவனுடன் சென்னை வந்து ஓட்டலில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார். #KeralaTeacherArrested #TeacherMissing
சென்னை:

கேரள மாநிலம்  ஆலப்புழா மாவட்டம் சேர்தலா  பகுதியில் உள்ள பள்ளியில் பணியாற்றும் 40 வயது நிரம்பிய ஆசிரியைக்கு, அதே பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி இவர்கள் இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் சென்னைக்கு வந்து ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.

கேரளாவில் மாணவனை காணாத பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதேபோல் ஆசிரியையின் பெற்றோரும் அவரைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளனர். விசாரணையில் ஆசிரியையுடன் மாணவன் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று சென்னை வந்த கேரள போலீசார், இருவரையும் மீட்டு கேரளாவிற்கு அழைத்து சென்றனர்.

மாணவனை சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சிறுவனைக் கடத்தியதாக ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். #KeralaTeacherArrested #TeacherMissing
Tags:    

Similar News