செய்திகள்

நெய்வேலியில் என்.எல்.சி. ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2018-09-25 09:58 GMT   |   Update On 2018-09-25 09:58 GMT
நெய்வேலியில் என்.எல்.சி நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
நெய்வேலி:

நெய்வேலி புதுநகர் 13-வது வட்டம் சோழன் தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 45). இவர் என்.எல்.சி. நிறுவனத்தில் போக்குவரத்து துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

சிதம்பரத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஞானசேகரன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றிருந்தார்.

இதையறிந்த மர்ம மனிதர்கள் நள்ளிரவு ஞானசேகரன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.30 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

நேற்று இரவு ஞானசேகரன் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளை போய் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தெர்மல் நகர் போலீசில் ஞானசேகரன் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகின்றார்.
Tags:    

Similar News