செய்திகள்

மாமல்லபுரம் அருகே கொள்ளையர்கள் 2 பேர் கைது

Published On 2018-09-23 12:14 GMT   |   Update On 2018-09-23 12:14 GMT
மாமல்லபுரம் அருகே கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

கல்பாக்கம், அணுபுரம், நெய்குப்பி, கரியச்சேரி பகுதிகளில் தொடர்ந்து வீடுகளின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் நடந்து வருகிறது. இது குறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மேடவாக்கம் பகுதியை சேர்ந்த சரவணன், அவரது நண்பர் சதீஷ்ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 3பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News