ராணிப்பேட்டை சிப்காட்டில் பெல் ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்
வாலாஜா:
ராணிப்பேட்டை பெல் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் சார்பில் 2-ம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் மேற்பார்வையாளர்கள் ஊதிய குழு அறிக்கை வெளியிட்டதை கண்டித்தும் எஸ் 1, எஸ் 3 மேலாளர்கள் ஊதிய மாற்றம் டி.பி.இ., டி.எச்.ஐ.ஜி. வழிகாட்டுதல் படி இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் எஸ் 1, எஸ் 3 பதவி உயர்வில் ஏற்பட்ட இழப்பை முழுமையாக ஈடு செய்ய வேண்டும்.
எஸ் 9, எஸ் 10 பதவிகள் புதிதாக உருவாக்கப்பட வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்க பொதுச் செயலாளர் ஸ்டாலின், உதவி தலைவர்கள் ராஜேந்திரன், கணேஷ்பாபு, உதவி பொதுச் செயலாளர் கண்ணன், அமைப்புச் செயலாளர் ரதீஷ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #Bhelworkerstruggle