செய்திகள்

கூடுதல் வரதட்சணை - நாளை நடைபெற இருந்த திருமணம் நிறுத்தம்

Published On 2018-09-11 10:26 GMT   |   Update On 2018-09-11 10:26 GMT
திருவெறும்பூர் அருகே மாப்பிள்ளை வீட்டினர் கூடுதல் வரதட்சணை கேட்டதால் நாளை நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
மணப்பாறை:

இதேபோல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி ராவுத்தான்மேட்டை சோந்தவர் சரவணன். இவரது மகன் மகேந்திரன். திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆலையில் கொள்முதல் பிரிவு அதிகாரியாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை திருமணம் நடைபெற இருந்தது. மாப்பிள்ளை வீட்டினர் வரதட்சணையாக 50 பவுன் நகை மற்றும் காருக்கு பதில் ரூ. 5 லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு பெண் வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் நாளை காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மகேந்திரன் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டார், திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர் . அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதராணி இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் பேசினார்.

ஆனால் மகேந்திரன் தரப்பினர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் வரதட்சணை, பெண் வன்கொடுமை மற்றும் மிரட்டியது என 3 பிரிவின் கீழ் மகேந்திரன், அவரது தாய் பாப்பாத்தி, தந்தை சரவணன், தங்கை மகாலட்சுமி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மகேந்திரனை கைது செய்தனர். மேலும் பாப்பாத்தி, சரவணன், மகாலட்சுமி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News