செய்திகள்
நீலாங்கரை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
நீலாங்கரை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest
சோழிங்கநல்லூர்:
நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேனி பகுதியில் கஞ்சா விற்பதாக நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனுக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜன், முரளி, பானுப்பிரியா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய பானுபிரியாவின் கணவன் காத்தவ ராயனை போலீசார் தேடி வருகின்றனர்.