செய்திகள்

சோழவந்தான் அருகே லாரி மோதி தொழிலாளி பலி

Published On 2018-09-01 09:53 GMT   |   Update On 2018-09-01 09:53 GMT
சோழவந்தான் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கட்டிட தொழிலாளி பலியானார்.

சோழவந்தான்:

சோழவந்தான் அருகே உள்ள மண்ணாடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் மாரநாடு (வயது 18). கம்பி கட்டும் கட்டிட தொழிலாளி.

இவர் தினமும் ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு வேலைக்கு செல்வது வழக்கம். இன்று காலை 8 மணி அளவில் வீட்டில் இருந்து மாரநாடு புறப்பட்டார்.

திருவேடகம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்தபோது, எதிரே மணல் லாரி வந்தது. எதிர்பாராத விதமாக அந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மாரநாடு தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதற்குள் மாரநாடு பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மாரநாடு பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் மண்ணாடிமங்கலம் கிராமம் சோகத்தில் மூழ்கி உள்ளது.

Tags:    

Similar News