செய்திகள்
கடலூர் ரைஸ் மில்லில் பணம்-பொருட்கள் திருட்டு
கடலூர் ரைஸ் மில்லில் கதவின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம மனிதர்கள் தூக்கி சென்று விட்டனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு வெள்ளிமோட்டான் தெருவில் ரைஸ் மில் நடத்தி வருகிறார். நேற்று இரவு அந்த மில்லின் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இரவில் மர்ம மனிதர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த உண்டியல் பணம் ரூ.2 ஆயிரம் மற்றும் பித்தளை பொருட்களையும் தூக்கி சென்று விட்டனர்.
இது குறித்து அவர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.