செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி

Published On 2018-08-29 16:13 GMT   |   Update On 2018-08-29 16:13 GMT
கிருஷ்ணகிரியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் நேற்று தொடங்கியது.
கிருஷ்ணகிரி:

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன அறையில் வைக்கப்பட்டுள்ளது. அதை பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்களை கொண்டு முதல் நிலை சரிபார்ப்பு பணி நேற்று தொடங்கியது.

கிருஷ்ணகிரியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, உதவி கலெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் இந்த முதல் நிலை சரிபார்ப்பு பணி தொடங்கியது. இந்த சரிபார்ப்பு பணியின் போது அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அறை திறக்கப்பட்டு பணிகள் தொடங்கியது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பொறியாளர்களை கொண்டு சரிபார்க்கப்படும் என தெரிவித்தனர். இந்த பணியின் போது அரசு அலுவலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News