செய்திகள்

ஈரோடு மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் கேரளாவுக்கு உணவு - அத்தியாவசிய பொருட்கள்

Published On 2018-08-27 11:08 GMT   |   Update On 2018-08-27 11:08 GMT
ஈரோடு மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் கேரளாவுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது.
ஈரோடு:

ஈரோடு மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் கேரளா மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ.10 லட்சத்து 71 ஆயிரத்து 966 மதிப்பீட்டிலான உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு லாரியில் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. அந்த வாகனத்தை ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.பார்த்திபன் அனுப்பி வைத்தார்.

ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர்- பணியாளர் அலுவலர் மீனா அருள், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர்- முதன்மை வருவாய் அலுவலர் அழகிரி, ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணைப் பதிவாளர்- மேலாண்மை இயக்குனர் கந்தராஜா மற்றும் கூட்டுறவுதுறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News