செய்திகள்

மது குடிப்பதை கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-08-17 12:41 GMT   |   Update On 2018-08-17 12:41 GMT
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் மனவேதனை அடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே பெருமாள் நகரைச் சேர்ந்தவர் சரவணன் (40)டிரைவர். இவரது மனைவி மஞ்சுளா (35).  இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சரவணன் மதுகுடித்து விட்டு மனைவி மஞ்சுளாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை மனைவி மஞ்சுளா கண்டித்ததாக தெரிகிறது. அதேபோல் சம்பவதன்று மது குடித்து விட்டு சரவணன்,  மஞ்சுளாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால்  மீண்டும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதனால் மனவேதனை அடைந்த  சரவணன் வீட்டில் யாரும் இல்லாத போதுதூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேலாயுதம்பாளையம்  போலீசார்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனின் உடலை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ  மனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

இதேபோல் தவுட்டுப்பாளையம் அருகே கட்டி பாளையம் கருப்பண்ணசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதாசிவம். இவரது  மனைவி சித்ரா  (28), இவர் அப்பகுதியில்  உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவர் சித்ராவை தகாத வார்த்தைகளால் பேசி, கையால் தாக்கியுள்ளார். இது குறித்து சித்ரா வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து காந்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News