செய்திகள்

வனப்பகுதிகளில் நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை

Published On 2018-08-15 18:08 GMT   |   Update On 2018-08-15 18:08 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் ஆகும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-ல் ஒரு பங்கு வனப்பகுதி உள்ளன. குறிப்பாக ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைப்பகுதியையொட்டிய வனப்பகுதிகளும் கிருஷ்ணகிரி மாவட்டத்தையொட்டி அமைந்துள்ளன.

இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் எதுவும் உள்ளதா? என நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் கிருஷ்ணகிரி, பர்கூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட வனப்பகுதிகளில் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வனப்பகுதியையொட்டி உள்ள கிராமமக்களிடம் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாராவது நடமாடினால் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். 
Tags:    

Similar News