செய்திகள்
கடலூரில் கிராம நிர்வாக அதிகாரியை ஆபாசமாக திட்டிய தொழிலாளி கைது
கடலூரில் மணல் கடத்தலை தடுத்த கிராம நிர்வாக அதிகாரியை ஆபாசமாக திட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் ரெட்டிச்சாவடி மற்றும் செல்லஞ்சேரி ஆகிய பகுதிகளில் மாட்டுவண்டிகளில் திருட்டுதனமாக மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து செல்லஞ்சேரி கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் பஸ்நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மாட்டுவண்டியில் மணல் கடத்திக்கொண்டு தெய்வசிகாமணி(வயது 60) என்பவர் வந்தார். அவரிடம் கிராம நிர்வாக அதிகாரி மணல் எங்கிருந்து கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டார்.
அப்போது அவர் கிராம நிர்வாக அதிகாரியை ஆபாசமாக பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலமுருகன் ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தெய்வசிகாமணியை கைது செய்து மணடல் கடத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
கடலூர் ரெட்டிச்சாவடி மற்றும் செல்லஞ்சேரி ஆகிய பகுதிகளில் மாட்டுவண்டிகளில் திருட்டுதனமாக மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகனுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து செல்லஞ்சேரி கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் பஸ்நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மாட்டுவண்டியில் மணல் கடத்திக்கொண்டு தெய்வசிகாமணி(வயது 60) என்பவர் வந்தார். அவரிடம் கிராம நிர்வாக அதிகாரி மணல் எங்கிருந்து கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டார்.
அப்போது அவர் கிராம நிர்வாக அதிகாரியை ஆபாசமாக பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாலமுருகன் ரெட்டிச்சாவடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தெய்வசிகாமணியை கைது செய்து மணடல் கடத்திய மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.