செய்திகள்

வாடிப்பட்டியில் பிளக்ஸ் போர்டு வைக்க தடை - போலீசார் எச்சரிக்கை

Published On 2018-07-29 15:32 IST   |   Update On 2018-07-29 15:32:00 IST
வாடிப்பட்டி பஸ்நிலையத்தில் பிளக்ஸ் போர்டு வைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ்நிலையத்தில் முன்பகுதி மற்றும் எதிர்புறத்தில் அனுமதியின்றி அரசியல் கட்சியினர், ஜாதிசங்கங்கள், திருவிழா, திருமணவிழா, காதணிவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிளக்ஸ் போர்டு வைக்கின்றனர்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் பிளக்ஸ் போர்டுகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து வாடிப்பட்டி காவல் துறையினர் எச்சரிக்கை போர்டு வைத்துள்ளனர்.

வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு பிளக்ஸ் பேனர்கள் மற்றும் விளம்பர பதாதைகள், வால் போஸ்டர்கள் வைக்க அனுமதி கிடையாது. மீறினால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. #tamilnews

Tags:    

Similar News