ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இலவச காச நோய் பரிசோதனை
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தீவிர காச நோய் கண்டுபிடிப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மேலும் இது தொடர்பாக சிறப்பு வாகனம் மூலம் ஈரோடு மாவட்டம் முழுவதும் இலவச காசநோய் பரிசோதனை செய்யப்பட உள்ளது.
இதற்காக சிறப்பு வாகனம் வந்துள்ளது. இந்த வாகனம் மூலம் வரும் 30-ந் தேதி வரை ஆகஸ்ட் 4-ந் தேதி வரை பல்வேறு ஊர்களுக்கு சென்று இலவச பரிசோதனை செய்யப்பட உள்ளது.
ஈரோட்டில் வரும் 30-ந் தேதி ஓடைப்பள்ளம், கிருஷ் ணம்பாளையம் காலனி, ராஜாஜிபுரம், செங்குட்டுவன் தெருவில் பரிசோதனை முகாம் நடக்கிறது.
அதே போல் அன்று சித்தோடு அம்பேத்கார் நகர், நாராயண வலசு, கஸ்பாபேட்டை, லக்காபுரத்திலும் இலவச பரிசோதனை நடக்கிறது.
31-ந் தேதி மொடக்குறிச்சி, சிவகிரி பகுதயிலும், 1-ந் தேதி திங்களூர் மற்றும் சென்னிமலை, 2-ந் தேதி ஜம்பை குருவரெட்டியூர், அத்தாணி பகுதியிலும், 3-ந் தேதி டி.என்.பாளையம், உக்கரம், பு.புளியம்பட்டி பகுதியிலும் நடக்கிறது. 4-ந் தேதி நம்பியூர் மற்றும் சிறுவலூர் பகுதிகளிலும் இலவச காசநோய் பரிசோதனை நடக்கிறது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் இதை தெரிவித்தார்.