செய்திகள்

சத்தியமங்கலத்தில் கல்லூரிக்கு பஸ் விட கோரி மாணவர்கள் சாலை மறியல்

Published On 2018-07-27 10:35 GMT   |   Update On 2018-07-27 10:35 GMT
சத்தியமங்கலத்தில் கல்லூரிக்கு பஸ் விட கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #studentstruggle

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலத்தில்அரசு கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 950 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

கல்லூரிக்கு செல்ல சரியாக பஸ் வசதி இல்லை என்று மாணவர்கள் கூறி வந்தனர். ஒரேயொரு பஸ் மட்டும் செல்கிறது.

அந்த பஸ்சும் அத்தாணி ரோட்டில் இறக்கிவிட்டு சென்று விடுகிறதாம். மேலும் அங்கிருந்து கல்லூரிக்கு 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டுமாம்.

சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு கலை கல்லூரிக்கு 4 கி.மீ. தூரம் உள்ளது.

ஆகவே பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இன்று காலை கல்லூரி மாணவ- மாணவிகள் அத்தாணி ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்தனர். மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு மாணவ-மாணவிகள் தங்களது கோரிக்கையை மனுவாக கொடுத்தனர்.

மனுவை போலீசார் பெற்றுக் கொண்டு அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மாணவ- மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #studentstruggle

Tags:    

Similar News