செய்திகள்

வன ஊழியர்களுக்கு வனவிலங்கு கணக்கெடுப்பு பற்றிய நவீன பயிற்சி

Published On 2018-07-26 17:46 IST   |   Update On 2018-07-26 17:46:00 IST
சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடும் வன ஊழியர்களுக்கு பாதுகாப்பு குறித்து வன உயிரின ஆராய்ச்சியாளர் பயிற்சி அளித்தார்.
தாளவாடி:

சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 7 வனச்சரங்கள் உள்ளன. மழைப்பொழிவுக்கு பின் வனத்தில் வாழும் வன விலங்குகள் நடமாட்டம் குறித்த கணக்கெடுப்புப்பணி ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், தலமலை, டி.என்.பாளையம், ஆசனூர், தாளவாடி, கேர்மாளம் ஆகிய 7 வனச்சரகத்தில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் வனவர் தலைமையில் 5 பேர் இதில் பணியில் உள்ளனர்.

கணக்கெடுப்பில் பணியில் ஈடுபடும் வன ஊழியர்களுக்கு வன உயிரின ஆராய்ச்சியாளர் சக்திவேல் பயிற்சி அளித்தார். கேர்மாளம் வனச்சரகத்தில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த கணக்கெடுப்பில் வன ஊழியர்கள் ஜிபிஎஸ், ரேஞ்ச் பைண்டர் போன்ற கருவிகளை பயன்படுத்தி கணக்கெடுப்பு மேற்கொள்ள உள்ளனர்.

ரேஞ்ச் பைண்டர் மூலம் தொலைவில் உள்ள வன விலங்குகள் நடமாட்டத்தையும் நீர்நிலைகளையும் ஆய்வு செய்ய முடியும்.

5 கி.மீ. பரப்பளவிற்குள் கண்ணில் தென்படும் வன விலங்குகள், தாவரங்கள், நீர் நிலைகள், மரங்கள் என அனைத்தும் குறிப்பு எடுக்க புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய செல்லிடை பேசி வழங்கப்பட்டுள்ளது.

இந்த செல்லிடைபேசியில் ஜிபிஎஸ் உதவியுடன் செல்போனில் கணக்கெடுப்பு பதிவு செய்வது மட்டுமின்றி ரோந்து பணிக்கும் பயன்படுத்தலாம்.

இந்த கருவிகளை பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்து வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News