செய்திகள்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழு ஆலோசனை

Published On 2018-07-25 21:36 IST   |   Update On 2018-07-25 21:36:00 IST
கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று சட்டமன்ற உறுதிமொழி குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோவை:

தமிழக சபாநாயகர் தனபால் கடந்த மாதம் 6-ந் தேதி பல்வேறு குழுக்களை அறிவித்தார். இதில் சட்டமன்ற உறுதிமொழி குழுவும் ஒன்று ஆகும். இக் குழுவின் ஆய்வு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 

கூட்டத்திற்கு சட்ட மன்ற உறுதி மொழி குழு தலைவர் இன்பத்துரை தலைமை தாங்கினார். இதில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், கஸ்தூரி வாசு, கார்த்திகேயன், நந்தகுமார், மனோகரன், ஜெயலிங்கம், சாந்தி ராமு ஆகியோர் கலந்து கொண்டனர். அரசு உறுதி அளித்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதா? என்பது தொடர்பாக 152 கேள்விகளை கேட்டு இக் குழுவினர் விசாரணை நடத்தினார்கள். 

கூட்டத்தில் குழு செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் பால சுப்பிரமணியன், கலெக்டர் ஹரி ஹரன், மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், சப்-கலெக்டர்கள் கார்மேகம், காயத்ரி, மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News