செய்திகள்

அரிசி ஆலை அதிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய 4 பேர் கும்பல் - போலீசார் விசாரணை

Published On 2018-07-14 13:11 IST   |   Update On 2018-07-14 13:11:00 IST
அரக்கோணத்தில் அரிசி ஆலை அதிபரை, 4 பேர் கும்பல் விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம்:

அரக்கோணம் ஜி.கே.என். நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 49). தொழிலதிபரான இவர், அதே பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். நேற்று இரவு அரிசி ஆலையில் இருந்து அரக்கோணம்-திருத்தணி ரோட்டில் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

பங்காரம்மா கண்டிகையில் வந்த அவரை 4 பேர் கும்பல் திடீரென வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தலையில் பலத்த வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியது.

உயிரை காப்பாற்றி கொள்வதற்காக சேகர் தப்பி ஓடினார். 4 பேர் கும்பலும் விடாமல் கொலை வெறியுடன் விரட்டினர். பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால், மர்ம கும்பல் சேகரை விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டது.

பொதுமக்கள் சேகரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிந்து சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News