செய்திகள்

புரை ஏறி இறந்ததாக கூறப்பட்ட 11 மாத ஆண் குழந்தையின் முதுகெலும்பு முறிவு

Published On 2018-07-08 13:15 IST   |   Update On 2018-07-08 13:15:00 IST
கேரளாவில் புரை ஏறி இறந்ததாக கூறப்பட்ட 11 மாத ஆண் குழந்தையின் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மனைவி சுகுணா. இவர்களது 11 மாத குழந்தை ஸ்டீவக். இவர்கள் குடும்பத்துடன் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் சரலயம் பகுதியில் வசித்து வருகிறார்கள்.

நேற்று குழந்தைக்கு சுகுணா பால் கொடுத்து பின்னர் படுக்க வைத்தார். பின்னர் துணி துவைக்க சென்று விட்டார். வெகுநேரம் குழந்தையின் அழுகுரலோ, அசைவோ இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த சுகுணா ஓடிச்சென்று குழந்தையை எடுத்து பார்த்தபோது குழந்தை மயங்கியதுபோல் கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் குழந்தையை எடுத்துக்கொண்டு குன்னங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் பால் புகட்டும்போது புரையேறி குழந்தை இறந்து விட்டதாக கூறினார்.

இதனையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் முதுகெலும்பில் 2 இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இது குறித்து குன்னங்குளம் போலீசாருக்கு தெரியவந்ததும் குழந்தையின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை புரையேறி இறந்ததா? அப்படி என்றால் முதுகு எலும்பு முறிவு எப்படி ஏற்பட்டது? குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News