செய்திகள்

பணம் வராததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த 2 வாலிபர்கள் கைது

Published On 2018-07-04 06:41 GMT   |   Update On 2018-07-04 06:41 GMT
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் பணம் வராததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் பகுதியில் தனியார் ஏ.டி.எம். உள்ளது. இங்கு கடந்த 27-ந் தேதி 2 பேர் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வந்தனர்.

பணம் வராததால் ஆத்திரம் அடைந்த இருவரும் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தி சென்று விட்டனர். இந்த காட்சி ஏ.டி.எம். மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து வங்கி மேலாளர் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 வாலிபர்களை தேடி வந்தனர். விசாரணையில் ஏ.டி.எம். எந்திரத்தை சேதப்படுத்தியது. திருவள்ளூரை அடுத்த கண்ணூர் கிராமத்தை சேர்ந்த இம்மானுவேல். அவரது நண்பர் மொளச்சூர் கிராமத்தை சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News