செய்திகள்

கிறிஸ்தவர்கள் புனித பயணத்துக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

Published On 2018-06-27 14:58 GMT   |   Update On 2018-06-27 14:58 GMT
விருதுநகர் மாவட்ட கிறிஸ்தவர்கள் புனித பயணத்துக்கு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சிவஞானம் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற் கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன் பெற விரும்பும் கிறித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புனித பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலீயோ சமுத்திரம் மற்றும் கிறித்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.

இப்புனித பயணம் ஜுலை-2018 முதல் டிசம்பர் -2018 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் ww.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்தும் பயன் படுத்தலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ‘ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம்’ என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், 807 (5-வது தளம்) அண்ணா சாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு 6.7.2018 மாலை 5.45 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News