வத்தலக்குண்டுவில் 2 வாலிபர்களிடம் செல்போன்கள் பறிப்பு
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு கே.கே.நகரைச் சேர்ந்தவர் மதன் (வயது 20). கல்லூரி மாணவர். நேற்று இரவு தனது வீட்டில் இருந்து பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஆட்டோ ஸ்டாண்டு அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரது முதுகை தட்டினர். இதில் மதன் கையில் வைத்திருந்த செல்போன் கீழே விழுந்தது.
உடனே அவர்கள் செல்போனை தூக்கிக் கொண்டு சென்று விட்டனர். இது குறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்தலக்குண்டு வேட்டுவர் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 23). இவர் திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டுக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். காளியம்மன் கோவில் அருகே இறங்கியதும் உடன் வந்த ஒருவர் தனக்கு பல்வேறு அதிகாரிகளை தெரியும் என்றும் அவர்களைக் கொண்டு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.
மேலும் அவரது செல்போனை வாங்கி தனது எண்ணை பதிவு செய்து கொள்ளும்படி கூறிக் கொண்டே அதனை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இது குறித்தும் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Tamilnews